ஐ பட பாணியில் விஜய் யின் 59 வது படம்
புலி படத்தை அடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சமந்தா ஹாஸ்டலில் தங்கி படிக்கும் காலேஜ் பெண்ணாக நடிக்கிறார். மேலும், பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன்,அழகம் பெருமாள், காளி வெங்கட், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இது ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படமாகும். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை அறிமுக பாடல் மற்றும் சில சண்டைக் காட்சிகளுடன் தொடங்கினர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை அறிமுக பாடல் மற்றும் சில சண்டைக் காட்சிகளுடன் தொடங்கினர்.
அதேபோல் அட்லி, இப்படத்தின் சில காட்சிகளையும் சீனாவில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படப்பிடிப்பில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது