கலாம் மறைவு: நாடே துக்கத்தில் மூழ்கியிருக்க “பர்த் டே பார்ட்டி” கொண்டாடிய தனுஷ்!
இந்தியாவிற்கே துக்க இரவாக மாறிப்போனது 27ம் தேதி இரவு. நமது பாரதநாட்டின் பொக்கிஷமான அப்துல் கலாமை நாம் இழந்தது அன்றுதான்.
தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவின ஜனாதிபதியாக ( தமிழ்நாட்டிலிருந்து 3 வது) உயர்ந்த அந்த மாபெரும் மனிதரின் மரணம் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
ஆனால் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பிறந்தநாள் விழாவை, மனைவி மற்றும் நண்பர்கள் புடைசூழ இனிதே கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.
சிறந்த நடிகர் என்று குடியரசுத் தலைவரின் கையால் தேசிய விருதை வாங்கிய நடிகர் தனுஷ் இவ்வாறு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.